ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்…!!
இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் உள்ள குதுப்மினாரில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.
எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த ரயில் நிலையத்தில், இரு தினங்களுக்கு முன்னர் அங்கு வந்த ரயிலில் 65 வயது மதிக்கத்தக்க முதிய பெண்மணி ஒருவர் ஏறினார்.
மெட்ரோ ரயிலில் முதியவர்களுகென சில தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கையில் 32 வயது இளம் பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
முதிய பெண்மணி அவரிடம் சென்று, எழுந்திரு இது என் இருக்கை என சிறிது அதட்டல் தோனியில் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
அப்போது அந்த முதிய பெண்மணி தன் பையில் வைத்திருந்த இரும்பு கோடாரியை திடீரென எடுத்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் அதை தடுக்க முயல அவர்களையும் கோடாரி மூலம் தாக்க முதிய பெண்மணி முயற்சித்துள்ளார்.
பின்னர் இது குறித்து ரயில்வே பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட விரைந்து வந்த அவர்கள் அந்த முதிய பெண்மணியிடம் இருந்து கோடாரியை கைப்பற்றி அவரை விசாரணைக்காக அழைத்து சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Average Rating