கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா? போலீசார் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழமலை(வயது 45). விவசாயி. இவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி என்ற இடத்தில் உள்ள விவசாய கிணற்றில் பழமலை பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பழமலையின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பழமலை கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating