சிரியாவில் அமைதி நிலவ வேண்டும்: சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…!!

Read Time:1 Minute, 36 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2சிரியா நாட்டில் நடக்கும் போர்கள் நிறுத்தப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என 7 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ஸ் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஆரூஷ் ஆனந்த் (7) இந்திய வம்சாவளியை சேர்ந்தவனான அரூஷ் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் என்ன பரிசுவேண்டும் என ஒரு கடிதமாக எழுதுமாறு அரூஷ் வகுப்பாசிரியர் மாணவர்களிடம் கூறியுள்ளார்.

அரூஷ் தனது கடிதத்தில் சிரியா நாட்டில் போர்கள் நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் அன்று அமைதி நிலவ வேண்டும், இது தான் எனக்கான கிறிஸ்துமஸ் பரிசு என எழுதி தன் ஆசிரியரிடம் கொடுத்துள்ளான்.

இது குறித்து அரூஷ் கூறுகையில், எனக்கு சண்டையே பிடிக்காது. சிரியா போரில் பலர் கொல்லப்படுகின்றனர். இது நிறுத்தப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடங்காமல் அடாவடித்தனம் பண்ணினால் விளைவு இப்படித்தான் இருக்கும் தம்பி…!! வீடியோ
Next post அன்று சாலையில்… இன்று மாளிகையில்…!!