மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்…!!

Read Time:1 Minute, 33 Second

201612181600306669_dhanush-again-second-part-movie-maari_secvpfதனுஷ் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘விஐபி 2’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்திற்கான பூஜையும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்படத்தின் இயக்குனரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து மேலும் தனுஷ் தன்னுடைய நடிப்பில் உருவாகி வெளிவந்த மற்றொரு படமான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே, ‘மாரி’ 2-ம் பாகம் உருவாகப்போவதாக செய்திகள் வெளிவந்தாலும், அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று ‘மாரி’ இரண்டாம் பாகத்தில் முழுக்கதையையும் இயக்குனர் பாலாஜி மோகன் தன்னிடம் ஒப்படைத்துவிட்டதாக தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் கதை முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இப்படத்தின் வேலைகள் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெடி மருந்துகளுடன், புலிகள் இயக்கத்தினருக்கு பர்மாவில் இருந்து வந்த ஆயுதக்கப்பல்..!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -100) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
Next post உங்கள் முகத்தில் எண்ணெயா? இதோ அருமையான டிப்ஸ்…!!