7 மாத பெண் குழந்தையின் வயிற்றில் சிசு: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…!!

Read Time:3 Minute, 55 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை கடந்த 2 மாதங்களாக அடிக்கடி ஓயாமல் அழுது வந்துள்ளது. இதனால் அப்பகுதில் உள்ள மருத்துவர்களிடம் காட்டியபோது, வயிற்று வலி காரணமாக குழந்தை அழுகிறது எனக்கூறி மருந்து கொடுத்து அனுப்பினர்.

இருப்பினும் குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றில் கட்டி உள்ளது, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டும் என தெரிவித்தனர்.

அதன்படி கடந்த 15ம் திகதி அறுவை சிகிச்சை செய்தபோது குழந்தையின் வயிற்றில் வளர்வது கட்டியல்ல, கட்டிபோன்ற உருவில் மற்றொரு சிசு வளர்வதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குறித்த கட்டியை அகற்றியுள்ளனர். குழந்தையின் எடை சுமார் 7 கிலோ உள்ள நிலையில் அதன் வயிற்றில் வளர்ந்த சிசு சுமார் 100 கிராம் இருந்தது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவிக்க்ஃஐயில், ஹாங்காங் நகரிலுள்ள பிரபல ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு சீன தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகள் வளர்வதை அறிந்த மருத்துவர்கள் பிரமிப்படைந்தனர்.

அந்த கருக்கள் 8 முதல் 10 வாரங்களாக சூல் கொண்டிருந்ததை அறிந்த மருத்துவர்கள், தொடர்ந்து அவைகளை ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு கால்கள், கைகள், ஒரு முதுகு, விலா மற்றும் தொப்புள் கொடி போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகி இருந்ததும்,

தோலால் மூடப்பட்ட அந்த இரண்டு கருக்கள் 14.2 மற்றும் 9.3 கிராம் எடை கொண்டிருந்ததும் தெரியவந்தது. 5 லட்சம் குழந்தைகளில் ஒன்றுக்கு இப்படி நடக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், மருத்துவ வரலாற்றில் இதுவரை 200 முறை இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு உருவாக காரணமாக ஒன்றை கருத முடிகிறது. அந்த குழந்தை தனது தாயின் வயிற்றில் தரித்த பின்னர்,

அந்தக் கருவுக்குக் காரணமான தம்பதியர் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட வேளையில் தந்தையின் விந்தணுக்களானது, தாயின் வயிற்றில் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்த அந்த பெண் குழந்தையின் கருவறைக்குள் நீந்தி சென்றதால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கக் கூடும் என குறித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியை கழட்டிவிட்டு விஷாலுக்கு மட்டும் கைகொடுத்தது ஏன்? : வடிவேலு விளக்கம்…!!
Next post பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்கள்…!!