நள்ளிரவில் நடந்த பயங்கரம்! துடிதுடிக்க ரத்தவெள்ளத்தில் பலியான நபர்…!!
சென்னையில் நேற்று முன்தினம் சொகுசு காரினால் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
சென்னை வடபழனி பரமேஸ்வரி காலனியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 55), கூலித்தொழிலாளியான பாஸ்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
நேற்று முன்தினம் அதிகளவு குடித்துவிட்டு போதையில் வடபழனி முருகன் கோவில் செல்லும் வழியில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் குறித்த சாலை வழியாக வந்த கார், பாஸ்கர் மீது ஏறியது, மோதிய வேகத்தில் பாஸ்கரை நடைமேடையில் இருந்து சாலைக்கு தரதரவென இழுத்து சென்று கார் நின்றுவிட்டது.
இந்த விபத்தில் பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார், காரில் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
சத்தம் கேட்டு விழித்து பார்த்தவர்கள் உடனடியாக பாண்டிபஜார் பொலிசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குபதிவு செய்துள்ள பொலிசார், சொகுசு காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் சமீபகாலமாக சொகுசு காரினால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating