தி.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி..!!
Read Time:1 Minute, 7 Second
சென்னை தி.நகர் ராமேஸ்வரம் சாலையில் வசித்து வந்தவர் பிஜி (24). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜவுளி கடை ஒன்றி பணிபுரிந்து வந்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜி அங்கு தங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு அவர் தங்கி இருந்த இடத்தில் தண்ணீர் தொட்டியில் பிஜி ஒரு வாளியை வைத்து தண்ணீர் எடுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி தொட்டிக்குள் விழுந்தார். பின்னர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிஜி தங்கி இருந்த இடத்தில் பாதுகாப்பான முறையில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருந்ததா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating