லாட்ஜில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பியவர் கைது…!!
கேரள மாநிலம் திருவ னந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு ஆபாச படம் வந்தது.
அவர் அதை பார்த்தபோது ஒரு பெண் லாட்ஜ் அறையில் குளித்து விட்டு உடை மாற் றும் காட்சி ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு அது வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. அந்த காட் சியை தொடர்ந்து பார்த்த வருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
காரணம், அந்த வீடியோ வில் இருந்த பெண் அவரது உறவினர் ஆவார். உடனே அவர், அந்த பெண்ணின் கணவரை தொடர்பு கொண்டு இந்த தகவலை கூறினார். மேலும் அந்த வீடியோவையும் அவருக்கு அனுப்பி வைத்தார்.
அந்த வீடியோவை பார்த்த அந்த பெண்ணின் கணவர் சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி இருந்தபோது இது படம் பிடிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.
உடனே அவர், இதுபற்றி பாலராமபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள்.
சைபர் கிரைம் போலீசார் புகாரில் கூறப்பட்ட பால ராமபுரம் லாட்ஜுக்கு சென்று அந்த கணவன்-மனைவி தங்கிய அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த அறையின் ஜன்னல் கதவில் சிறிய அளவில் துவாரம் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த அறையின் பக்கத்து அறையில் தங்கி இருந்தவரிடம் விசாரித்தனர். அங்கு தங்கி இருந்தவர் பெயர் ரமேஷ் (வயது 46), நெல்லை மாவட்டம் பாளையங்கோட் டையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் லாட்ஜில் தங்கி இருந்து கேரளாவில் பூஜை பொருட் கள் மற்றும் வாசனை திரவியங்களை விற்பனை செய்பவர் என்பதும் தெரிய வந்தது.
அவரது பேச்சில் போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட் டதால் அவரது செல்போனை வாங்கி பார்த்தனர். அப் போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதில் ஏராளமான பெண்களின் ஆபாச படங் கள் இருந்தது தெரிய வந்தது.
பக்கத்து அறையில் துவாரம் போட்டு அந்த காட்சிகளை அவர் படம் பிடித்திருந்தார். மேலும் வாட்ஸ் அப்பில் பரவிய இளம்பெண்ணின் ஆபாச படத்தையும் ரமேஷ்தான் பரப்பியதும் தெரிய வந்தது.இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Average Rating