டெல்லியில் சொகுசுகாருக்குள் 17 வயது இளம்பெண் சுட்டுக்கொலை…!!

Read Time:2 Minute, 0 Second

201612211225111609_17-year-old-girl-shot-dead-in-delhi_secvpfடெல்லியில் சொகுசு காருக்குள் 17 வயது இளம் பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

டெல்லி நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண். நேற்று மதியம் தனது நண்பர்கள் 2 பேருடன் விருந்துக்கு சென்றார். பின்னர் மெர்சி டஸ் பென்ஸ் சொகுசு காரில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு மாலை 7.30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

வீட்டின் அருகே மகளை எதிர் பார்த்து தாய் காத்திருந்தார். அப்போது வீட்டின் முன் மகளின் கார் வந்து நின்றது. காரில் இருந்து நண்பர்களில் ஒருவர் கீழே இறங்கினார். மேலும் ஒரு நண்பருடன் இளம் பெண் காரிலிருந்து இறங்கினார்.

அப்போது திடீர் என்று காருக்குள் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே தாய் சென்று பார்த்த போது இளம்பெண் காருக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நண்பர் ஒருவர் வேகமாக அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

உடனே இளம்பெண்ணை தாயும் மற்றொரு நண்பரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரி சோதித்த டாக்டர்கள் இளம் பெண் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இளம் பெண்ணை சுட பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினார்கள். தப்பி ஓடிய நண்பரை போலீசார் தேடுகிறார்கள். அவரது குடும்பத்தினரும் தலை மறைவாகி விட்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பவானி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் படுகொலை…!!
Next post பின்னணிப்பாடகர் உன்னிகிருஷ்ணனிடம் ரூ.1½ லட்சம் சுருட்டல்…!!