மகாராஷ்டிரா ஓட்டலில் தீ விபத்து: 7 பேர் பலி…!!
மகாராஷ்டிர மாநிலம் கொண்டியா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கட்டிடம் முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில் “மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தின் உள்ளே யாராவது சிக்கிக் கொண்டார்களா? என தேடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” என்றார்.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் 15 பேர் வரை கட்டிடத்தின் உள்ளே சிக்கியிருந்ததாகவும், 7 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. விபத்தின்போது கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். ஓட்டல் அறைகளில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட கலெக்டர் அபிமன்யூ காலே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டு வருகிறார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating