ஜேர்மனியில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மற்றொரு சம்பவம்! கதறி அழும் குழந்தைகள்…!!
ஜேர்மனி நாட்டின் மார்க்கெட் சாலை கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் தற்போது மக்கள் கூட்டத்துடன் காணப்படுகிறது.
அங்கு எடுக்கப்பட்ட ஒரு அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதில், பரபரப்பான மார்கெட் சாலையில் கருப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒரு நான்கு பேர் நிற்கும் கும்பலில் சிலரை தாக்கிவிட்டு ஒடுவது போலவும், ஓடும் போது சாலையில் நின்றிருந்த ஒருவர் மீது வேண்டுமென்றே மோதி அவருடன் கட்டி உருண்டு சண்டை போடுகிற மாதிரியும் அந்த வீடியோ காட்சியில் உள்ளது.
இந்த வீடியோவை தனது செல்போனில் எடுத்தவர் கூறுகையில், இது போல சண்டை நடைபெறுவது இது முதல் முறையல்ல, பல முறை சாலையில் இப்படி நடந்துள்ளது.
கலவரத்தை தூண்ட இப்படி வேண்டுமென்றே செய்கிறார்களா என தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த சண்டையில் சாலையில் இருந்த கிறிஸ்துமஸ் மரங்கள், சில கார்களின் கண்ணாடி என சேதமடைந்துள்ளது என கூறிய அவர் $100 அளவு பொருட்கள் மொத்தம் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடடையில் இந்த சண்டையில் சம்மந்தப்பட்ட 6 பேரில் 2 பேரை தற்போது கைது செய்துள்ள பொலிசார் மற்ற நபர்களை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating