ஒரு பெண் – 35 ஆண்கள் கூட்டுசேர்ந்து செய்த காரியம்…! அதிரடி காட்டிய பொலிஸ்…!!
Read Time:1 Minute, 16 Second
கதிர்காமம் புனித பூமியில், சிறுவர்களை ஈடுபடுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெண் ஒருவர் உள்ளிட்ட 35 ஆண்களை இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் லுனுகம்வேஹர, புத்தல, பசறை, திஸ்ஸமஹாராம மற்றும் கதிர்காமம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அனைவரும் சிறுவர்களை முன்னிறுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த திடீர் சுற்றி வளைப்பின் போது 8 சிறுவர்களையும் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating