39000 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கப்போகும் பேரழிவு! ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்…!!
இத்தாலியில் உள்ள கேம்பி பிளக்கெரி என்னும் எரிமலை தற்போது வெடிக்கும் நிலையில் இருப்பதாக இத்தாலி ஆய்வாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
இத்தாலியில் நப்லி நகரத்திற்கு அருகில் உள்ள Campi Flegrei என்னும் எரிமலையே தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிமலை வெடிக்குமாயின் சுமார் 5 லட்சம் பேர் பாதிப்படையும் நிலைமை ஏற்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த எரிமலையானது நப்லி நகரத்தை ஒட்டியுள்ளதோடும் மட்டுமில்லாமல் மறுமுனையில் விசுவியஸ் எரிமலையையும் காணப்படுவதால் புவியியல் ரீதியில் பெரும் பேரழிவிற்கு சாத்தியம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று கடந்த 39,000 ஆண்டுகளுக்கு முன்னர் Campi Flegrei வெடித்ததாகவும், அதனால் அப்பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீற்றர் தொலைவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஐரோப்பாவில் 2,00,000 வருடங்களில் நடந்த மிகப்பெரும் எரிமலை வெடிப்பு இது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து Campi Flegrei எரிமலை கடந்த 2005 ஆம் ஆண்டு வரை தூங்கும் நிலையில் காணப்பட்டதாகவும், பின்னர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் உயிர் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனால் தற்போது Campi Flegrei எரிமலை வெடிப்பதற்கு தயாராகி உள்ளதாக இத்தாலி எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating