கள்ளக்காதலனை கொலை செய்த பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள்…!!

Read Time:2 Minute, 56 Second

201612221257390956_double-life-sentence-for-the-murder-of-2-people-including_secvpfவேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 45). மாற்றுத்திறனாளி.

இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் (54) என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஜெயவேலு முனியம்மாளின் மகள் துர்காதேவியை (34) அடைய நினைத்தார். தனது ஆசை குறித்து முனியம்மாளிடம் ஜெயவேலு கூறினார். இதனால் முனியம்மாளுக்கும் ஜெயவேலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஜெயவேலுவை கொலை செய்ய முனியம்மாள் மற்றும் துர்காதேவி ஆகியோர் திட்டம் தீட்டினர். இந்த திட்டத்தில் அதே கிராமத்தை சேர்ந்த துர்காதேவிக்கு தெரிந்த சக்கரவர்த்தி (35) என்பவரும் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி ஜெயவேலுவை, முனியம்மாள் அந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கு அழைத்து சென்றார். அங்கு முனியம்மாளும், சக்கரவர்த்தியும் சேர்ந்து ஜெயவேலுவை கட்டையால் தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் 3 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி ஜெயவேலுவை கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி லதா தனது தீர்ப்பை வழங்கினார்.

அதில் ஜெயவேலுவை கொலை செய்த முனியம்மாள் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலைக்கு உடந்தையாக இருந்த துர்காதேவிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அதை தொடர்ந்து 3 பேரும் வேலூர் சிறைக்கு பலத்த போலீஸ் காவலுடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராணிப்பேட்டை அருகே கர்ப்பிணி பெண் தீக்குளித்து பலி: கணவர் தலைமறைவு…!!
Next post இந்த வருடத்தில் நல்ல படங்களில் நடித்த திருப்தி எனக்கு இருக்கிறது: தமன்னா…!!