பெண்கள் எந்த வயதில் உள்ளாடைகள் அணிவது சிறந்தது?
முன்னோர்களின் காலத்தில் பெண்கள் பருவம் அடைந்தவுடன் உள்ளாடைகளை கட்டாயம் பெண்கள் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.
ஆனால் தற்போதைய காலங்களில் ஒவ்வொரு பெண்களும் வேறுபட்ட வயதில் பருவம் அடைவதால், அந்த நிலைகள் முற்றிலும் மாறுபட்டு விட்டது.
ஒரு பெண் எப்பொது தன்னுடைய அம்மாவின் உள்ளாடைகளை உற்று நோக்குகிறாளோ, அந்த வயது தான் அவளின் முதல்கட்ட பருவ நிலையாகும்.
இந்த நிலையில் அவள் சிறுமியாக இருந்தாலும், உள்ளாடைகளைப் பற்றி அவர்களுக்கு பக்குவமாக எடுத்துக் கூறுவது அம்மாவின் கடமையாகும்.
பொதுவாக ஒரு சிறுமியின், எட்டு வயதிற்கு பிறகு, அவளின் மார்பக வளர்ச்சி என்பது மேம்படத் தொடங்கும்.
ஆனால் சிறுமிகளின் எட்டு வயது காலகட்டத்தை பார்க்காமல், அவர்களின் உடல் வளர்ச்சியையும் நன்றாக கவனிக்க வேண்டும்.
உள்ளாடைகளை எப்படி பயன்படுத்த வேண்டும். அதை எவ்வாறு அணிய வேண்டும் என்ற இது போன்ற சிறுமிகளின் பலவிதமான கேள்விகளுக்கு மறுக்காமல், அம்மா தன் மகளுக்கு சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
சிறுமிகளின் ஒவ்வொருவர்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் மார்பக வளர்ச்சியும் அமையும்.
எனவே குறிப்பிட்ட வயதில் மட்டும் தான் அவர்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்கும் என்று கூற முடியாது.
இதனால் சிறுமிகளின் மார்பக வளர்ச்சி மேம்படுவதை அறிந்துக் கொண்டு உள்ளாடைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating