மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

Read Time:2 Minute, 18 Second

201612231330145153_girl-student-molested-case-double-life-sentence-to-young-man_secvpfபவானி வர்ணபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 31) திருமணம் ஆகிவிட்டது. இவர் தனது அண்ணன் அருமை பெருமாள் கடையில் 1½ ஆண்டு வேலை பார்த்து வந்தார்.

அப்போது பவானி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடைக்கு வரும்போது அவருடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்தனர். அப்போது மாணவிக்கு அவர் திருமண ஆசை காட்டி பழகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 01.12.2014 அன்று மாணவியிடம் விஜயன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதேபோல் 03.12.2014 அன்று பள்ளி முடிந்து வந்த மாணவியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆனார் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.

இதுதொடர்பாக பவானி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. விஜயனை போலீசார் கைது செய்தனர். மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜயன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுபற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட விஜயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 2 பிரிவின் கீழ் தலா ரூ.100 அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாத ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வக்கீல் சுமதி ஆஜர்ஆனார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்க கண்கள் இப்படி இருக்கா? அப்ப இந்த பிரச்சனையாக இருக்கலாம்: உஷார்…!!
Next post இன்னும் இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள் இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரங்கள்…!! வீடியோ