சிறுமிக்கு 58 வயது நபரால் நடந்த சோகம்…!!
சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் நல்லதண்ணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நேற்று மாலை ஹட்டன் நீதவான் நீதின்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி வீட்டுக்கு மரக்கறி வாங்க சென்ற போது, குறித்த நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் பெற்றோர், நல்லதண்ணி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளமைக்கு அமைவாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நீதிமன்றம், மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை நாவலபிட்டி பொது மருத்துவனைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சந்தேக நபர் நல்லதண்ணி – லக்ஷபான பிரதேசத்தை சேர்ந்த 58 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating