போலீஸ் சோதனையின்போது வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்த பெண் – சிறுவன்…!!

Read Time:2 Minute, 17 Second

201612241956583782_woman-teen-boy-blow-themselves-up-during-police-raid-in_secvpfவங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள அஷ்கோனா பகுதியில் உள்ள ஒரு முன்று மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆயுதங்களுடன் இன்று அதிகாலையில் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.

பின்னர், கட்டிடத்தில் இருந்த பொதுமக்களை வெளியேற்றியதும் தீவிரவாதிகளை சரண் அடையும்படி எச்சரித்தனர். தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வைத்திருந்ததால் போலீசார் யாரும் உள்ளே சென்று அதிரடி தாக்குதல் நடத்த முயற்சிக்கவில்லை.

போலீசாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஒரு பெண், குழந்தையுடன் வெளியே வந்தார். ஆனால், போலீசாரைப் பார்த்ததும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துபோனார். அப்போது அருகில் நின்றிருந்த ஒரு பெண் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகளுடன் சரண் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை கட்டிடத்தை நோக்கி வீசினர். அப்போது உள்ளே வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டது. சத்தம் அடங்கியதும் போலீசார் உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது, ஒரு சிறுவன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இறந்துபோன சிறுவன் தப்பி ஓடிய தீவிரவாத அமைப்பின் தலைவரின் மகன் என்றும், இறந்துபோன பெண் மற்றொரு தலைவரின் மனைவி என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்ப சொத்துக்காக 7 வயது தம்பியை கிணற்றில் தள்ளிக் கொன்ற அண்ணன்…!!
Next post புலிகள் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம்: நல்லூரில் மக்கள் வெள்ளம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -101) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)