சிவன் சிலை முன்பு நரபலி கொடுக்கப்பட்ட இளம்பெண்?… வீடியோவால் பரபரப்பு

Read Time:2 Minute, 33 Second

swiss_girl_001-w245சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவன் சிலை முன்னால் நரபலி கொடுப்பது போன்ற தான் இந்த காட்சிகள் இடம் பெற்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இக்காட்சியில் சிவன் சிலைக்கு முன்னால் சிலர் கருப்பு உடையணிந்து கொண்டு சுற்றி வருகின்றனர்.இவர்களில் மத்தியில் ஒரு பெண்ணும் வருகிறார். சில நிமிடங்களுக்கு பிறகு அப்பெண் கீழே படுக்கிறார். அப்போது, நபர்களில் ஒருவர் கத்தியை ஓங்கி கீழே படுத்திருக்கும் பெண்ணை வெட்டுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இக்காட்சியை தூரத்திலிருந்து ஒருவர் கைப்பேசியில் படம் பிடித்ததாக தெரிகிறது. இந்த வீடியோ வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆனால் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி துறை அதிகாரிகள் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

இது குறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு அவர்கள் பேட்டியளித்த போது, இந்த அலுவலகத்திற்கு மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். மேலும், மாணவர்கள் நகைச்சுவைக்காக இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுகின்றார்கள். மாணவர்களின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சிவன் சிலைக்கு முன்னால் யாரும் நரபலி கொடுக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை…!!
Next post தஜிகிஸ்தான்: சமாதானத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு…!! கட்டுரை