பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை…!!

Read Time:2 Minute, 6 Second

201612250536391744_tamilnadu-engineer-stabbed-and-killed-in-paris-city_secvpfதமிழகத்தின் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26). இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் எந்திர பொறியியல் படித்து பட்டம் பெற்றுவிட்டு, அங்கேயே என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் இவர் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக பாரீஸ் பதினைந்தில் உள்ள 12-ம் எண் மெட்ரோவில் உள்ள வாகிரார்டு மெட்ரோ நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது அவர் அந்த மெட்ரோ நிலையத்துக்கு வெளியே நெஞ்சிலும், கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் அப்படியே நண்பரின் வீட்டுக்கு சென்று அழைப்பு மணியை ஒலித்து விட்டு, அங்கு சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.

அழைப்பு மணி ஓசை கேட்டு வெளியே வந்த அவரது நண்பர், தன்னைக் காண வந்த நண்பர் மணிமாறன் ரத்த வெள்ளத்தில் பிணமாக சரிந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக பாரீஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், கொலையாளியை தேடியும் வருகிறார்கள்.

கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. யாரேனும் திட்டமிட்டு கொன்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம், அங்கு வாழ்கிற தமிழர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் பிரபு சத்ரியன் ஆனார்…!!
Next post சிவன் சிலை முன்பு நரபலி கொடுக்கப்பட்ட இளம்பெண்?… வீடியோவால் பரபரப்பு