குஜராத்தில் கார் – பஸ் மோதி விபத்து: 6 பேர் பலி…!!
Read Time:1 Minute, 16 Second
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சவர்குந்தலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியி்ல் கலந்து கொண்டு ராஜ்கோட் திரும்பி கொண்டிருந்தார்கள். இவர்கள் வந்த கார் கலாவத் – தோராஜிக்கு இடையிலான சாலையில் சனோசரா கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ராஜ்கோட் மாவட்டம் கோந்தலை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
சனோசரா பகுதியில் கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழ்ந்தவர்களில் 7 வயது சிறுமியும் ஒருவரும். சிறுமியைத் தவிர மற்ற ஐந்து பேரும் 27 வயதிற்குட்பட்வர்கள் ஆவார்கள்.
10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் கலாவத்தில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Average Rating