மும்பையை அதிர வைத்த 2 சிறுவர்கள்: இப்படியும் கொலை செய்வார்களா?

Read Time:3 Minute, 15 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70இந்தியாவில் பணத்திற்காக குழந்தையை கடத்திய இரண்டு சிறுவர்கள் இரக்கமின்றி குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பெயர் வெளியிடப்படாத குடும்பத்தை சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை ஒன்று கடந்த 5ம் திகதி காணாமல் போயுள்ளது.

குழந்தையை காணாமல் பதறிப்போன பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘குழந்தையை ஒப்படைக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்’ என மர்ம நபர்கள் தந்தையை மிரட்டியுள்ளனர்.

திடீரென 1 கோடியை திரட்ட முடியாமல் பெற்றோர் தவித்துள்ளனர். பின்னர், 28 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்ட தந்தையை ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்துள்ளனர்.

ஆனால், தெற்கு மும்பையில் உள்ள Kazipura பகுதியில் குழந்தை ஒன்றின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு சென்று பொலிசார் பார்த்துள்ளனர்.

அப்போது, அது காணாமல் போன குழந்தையின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் சடலத்தை கண்டு பெற்றோர் அலறி துடித்துள்ளனர்.

விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் குழந்தையின் பெற்றோர் வசித்த வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரணையை முடக்கியுள்ளனர்.

அப்போது, 16 வயது சிறுவன் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனிடம் விசாரணை செய்தபோது ‘எனக்கு எதுவும் தெரியாது என முதலில் கூறியுள்ளான்.

ஆனால், பொலிசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிக்கிய சிறுவன் ‘மற்றொரு 16 வயதான சிறுவனுடன் இணைந்து இருவரும் குழந்தையை கடத்தியதாகவும், கடத்திய முதல் நாளிலேயே செல்போன் சார்ஜர் ஒயிர் வைத்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக’ ஒப்புக்கொண்டான்.

மேலும், குழந்தை அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கத்தியால் வெட்டியதாகவும் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

சிறுவனின் தகவலை பெற்ற பொலிசார் மற்றொரு சிறுவனையும் கைது செய்து இருவரையும் சிறுவர் சீர்த்திருத்த சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய களத்தில் தடம்பதிக்கும் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம்…!!
Next post விபரீதத்தில் முடிந்த கொண்டாட்டம்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி..!!