மனித வெடிகுண்டாய் மாறிய இளம் பெண்! சில நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!
வடகிழக்கு நைஜீரியாவில் பல மக்களை கொல்லும் நோக்கில் வெடிகுண்டோடு வந்த இளம் பெண் அந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வடகிழக்கு நைஜீரியாவின் தலைநகரான Maiduguriல் புகழ்பெற்ற மார்க்கெட் வீதி ஒன்று உள்ளது. மக்கள் நடமாட்டத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த இடத்துக்கு இரண்டு பெண்கள் வந்தனர்.
மனித வெடிகுண்டான அவர்களில் ஒரு பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து அங்குள்ள மக்களை கொல்ல நினைத்தார். ஆனால் அவர் நினைத்த மாதிரி வெடிகுண்டு வெடிக்கவில்லை.
அவருடன் இருந்த இன்னொரு பெண் அந்த வெடிகுண்டை அழுத்த அது வெடித்து உடலில் வெடிகுண்டை கட்டியிருந்த அந்த பெண் மட்டும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், Boko Haram என்னும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த பெண்கள் என கூறியுள்ளனர்.
அந்த வெடிகுண்டு சரியான அளவில் வெடித்திருந்தால் மிக பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அது தவறாக போனதால் அந்த பெண் மட்டுமே இறந்துள்ளார் என கூறியுள்ளனர்.
கடந்த வாரம் நைஜீரியாவின் ஜனாதிபதி Muhammadu Buhari, Boko Haram தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபர்களை அழித்து விட்டோம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating