திருமணத்துக்கு முன் தகாத உறவு…காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள்! கதறிய இளம்பெண்…!!
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் நிர்மல்ராஜ்(26).
இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய மகள் கார்த்திகா (26) என்பவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதை அறிந்த பொலிசார் அங்கு வந்து கார்த்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இது குறித்து பொலிசாரிடம் கார்த்திகா கூறியதாவது, நான் கடந்த 2009–ம் ஆண்டு நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்தேன்.
அப்பொழுது, அங்கு பயின்ற சீனியர் மாணவர் ஒருவர் மூலம், சாணார்பட்டியை சேர்ந்த நிர்மல்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம்.
இந்நிலையில், கட்டாயமாக திருமணம் செய்து கொள்வேன் ஏமாற்றமாட்டேன் என்று கூறி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்.
பின்னர், அவர் குடும்பத்தார் என்னை ஏற்கவில்லை எனக் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனால் நான் திண்டுக்கல் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் பொலிசார் வழக்குப்பதிவு செய்து நிர்மல்ராஜை கைது செய்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டு நன்றாக தான் வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் பல் மருத்துவம் படிப்பதற்காக என்னைவிட்டு சென்றார். அதன்பிறகு நான் பலமுறை அவரிடம் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
இதற்கிடையில் அவரது குடும்பத்தினர் எங்கள் இருவரையும் பிரிக்க முயல்கின்றனர். எனவே அதைத் தடுத்து எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கதறியுள்ளார்.
பின்னர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் உறுதி அளித்ததையடுத்து அந்த பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
Average Rating