எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது டெல்லி போலீஸ்…!!
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது உறவினர்கள் டெல்லிக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் டாக்டர் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
ஆனால் குடும்பத்தினர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சரவணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சரவணனின் உடலில் யாரோ விஷ ஊசியை செலுத்தியிருக்க வேண்டும் என்றும், மருத்துவம் தெரிந்தவராலேயே ஊசியை செலுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சரவணனின் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என அவரது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணத்தை கொலை வழக்காக டெல்லி போலீஸ் பதிவு செய்துள்ளது. இதனால் சரவணன் மரணம் குறித்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Average Rating