பிரித்தானியாவில் துயரம்! கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆறு மாத குழந்தை கொலை: காரணம்?
Read Time:1 Minute, 19 Second
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்னு ஆறு மாத குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிஸ்டல், Kingswood பகுதியில் உள்ள குடியிருப்பிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை தகவலறிந்து சம்பவயிடத்திற்கு பொலிசார் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் விரைந்துள்ளனர். ஆனால், அவர்களால் ஆறு மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடியிருப்பில் பொலிசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் குடியிருப்பின் மேல் மாடியில் ஆதாரம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Average Rating