இரவில் பெண்ணாக மாறும் ஆண்…!!
இரவில் தனது கணவன் பெண்ணாக மாறுவதால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தருமாறு கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் நவீனுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் அனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தருமாறு அனிதா காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, எங்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்களின் முதலிரவு அன்று, எனது கணவர் புடவை அணிந்துகொண்டு தான் வந்தார்.
அவரின் செயல் எனக்கு அதிர்ச்சியளித்தது. காலையில் பணிக்கு செல்லும் அவர், இரவில் வீடு திரும்பியது பெண் போன்று நடந்து கொள்கிறார். சேலை மற்றும் வளையல்களை அணிந்துகொள்கிறார்.
அவர், ஓரினச்சேர்க்கை வாழ்க்கையை விரும்புவதால் தான் இவ்வாறு நடந்துகொள்கிறார். எனவே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating