கும்மிடிப்பூண்டி அருகே மாயமான அக்காள் – தங்கை கிணற்றில் பிணமாக மீட்பு..!!

Read Time:2 Minute, 43 Second

201612281228291277_missing-sisters-dead-body-recovery-water-well-near_secvpfகும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, கரும்புகுப்பத்தில் வசித்து வருபவர் ஜெய்சங்கர், கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களது மகள்கள் அர்ச்சனா (வயது 7), சஞ்சனா (5).

கடந்த திங்கட்கிழமை ஜெய்சங்கர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். உமா, 2 மகள்களையும் வீட்டில் தனியாக விட்டு விட்டு மீஞ்சூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

மாலையில் கணவன்-மனைவி இருவரும் திரும்பி வந்தபோது மகள்களை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதி தைலமர தோப்பில் உள்ள தரைக்கிணற்றில் மாயமான அர்ச்சனாவும், சஞ்சனாவும் பிணமாக மிதந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகள்களின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 2 சிறுமிகளும் எப்படி இறந்தனர் என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமிகள் பிணமாக கிடந்த கிணறு அவர்கள் வசித்த வீட்டில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் உள்ளது. பெற்றோர் வீட்டில் இல்லாதபோது அவர்கள் வெளியில் சென்றிருக்க முடியாது.

எனவே மர்ம நபர்கள் யாரேனும் 2 சிறுமிகளையும் கடத்தி கொன்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

மாயமான 2 சிறுமிகள் கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹாஃப் பாயில் உடம்பிற்கு நல்லதா?
Next post கோபி அருகே தலையில் கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை கைது…!!