இரவு நேரத்தில் இதனை குடியுங்கள்…!!

Read Time:1 Minute, 58 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70நாம் இரவில் சரியாக உறங்கவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதுமே நமக்கு வீண் தான்.

நமது உடம்பிற்கு போதுமான ஓய்வு, நாம் இரவில் சரியாக தூங்வதால் மட்டுமே கிடைக்கிறது.

முறையாக தூக்கம் இல்லாத போது பலவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.

எனவே இரவு நேரத்தில் படுத்ததும் தூக்கம் வருவதற்கு இயற்கையான முறையில், வாழைப்பழ டீ தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 5
தண்ணீர் – 1 கப்
இலவங்கப் பட்டை – சிறிதளவு
செய்முறை

முதலில் வாழைப்பழத்தை தோல் உரித்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி அதனுடன் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் சிறிதளவு இலவங்கப் பட்டையை சேர்த்து இறக்க வேண்டும்.

பின் தயார் செய்த வாழைப்பழ டீயை, வடிக்கட்டி உறங்கச் செல்லும் முன்பு குடிக்க வேண்டும்.

இந்த வாழைப்பழத்தில், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவு இருப்பதால், இவை இரவில் நமக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு…!!
Next post விக்ரம் எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…!!