கொடிய பாம்பு கொத்தியும் உயிர் பிழைத்த சிறுவன்: இறந்த பாம்பு- நிகழ்ந்த ஆச்சரியம்…!!

Read Time:1 Minute, 57 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2உலகின் கொடிய வகை பாம்பு 12 வயது சிறுவனை கொத்தியும் கூட அவன் உயிர் பிழைத்துள்ள ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் Leila, இவரின் மகன் Jake Taylor (12) பள்ளி விடுமுறையையொட்டி Jake தனது நண்பர்களின் குடும்பத்துடன் கிழக்கு தென் ஆப்பிரிக்காவில் உள்ள Natal மாகாணத்துக்கு சுற்றுலா சென்றிருந்தான்.

சுற்றுலாவை முடித்துவிட்டு அன்றிரவு அயர்ந்து தூங்கியுள்ளான், அப்போது திடீரென அவனது தோளில் வலி ஏற்படவே எழுந்து பார்த்த போது கையில் பாம்பு இருந்துள்ளது.

சாதுர்யமாக அதை தூக்கி எறிந்த அவன் சத்தமாக கத்தியுள்ளான். அருகில் இருந்த Jake நண்பனின் உறவினர்கள் அந்த பாம்பை அடித்து கொன்றதுடன், அவனை உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது பற்றி Jakeன் தாய் Leila கூறுகையில், அந்த பாம்பின் ஒரு பல் மட்டுமே அவனை தீண்டியுள்ளதால் சிறிய அளவிலான விஷம் மட்டுமே அவன் உடலில் ஏறியது.

அதனால் அதிர்ஷ்டவசமாக அவன் பிழைத்து கொண்டான் என கூறியுள்ளார்.

இதனிடையில் தனக்கு நடந்த இந்த சம்பவம் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும் என குறிப்பிடும் வகையில் சிறுவன் Jake தன்னை கொத்தி உயிரிழந்த அந்த பாம்பை கண்ணாடி ஜாடிக்குள் போட்டு பத்திரபடுத்தி வைத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீக்கிரையான 23 உயிர்கள்: சுவிஸில் இடம்பெற்ற கோர விபத்து…!!
Next post தூங்கிய தாயாரை ஏமாற்றி சிறுமி செய்த செயல் என்ன தெரியுமா? வங்கிக் கணக்கில் ரூ.37,500 மாயம்..!!