ஒரு டிரைவரின் காமப்பிடியில் நான் சிக்கினேன் – பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை பேச்சு…!!
தெலுங்கு, தமிழ் என சில முக்கிய படங்களில் அறியப்பட்டவர் ரேஷ்மி கவுதம். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் மகேஷ் பாபு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதுவரை உள்ளுக்குளே வைத்திருந்த விஷயத்தை முதல்முறையாக ஒரு டிரைவரின் காமப்பிடியில் சிக்கிய அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். எனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம் பற்றி வெளிப்படுத்தாமல் இதுநாள் வரை இருந்து வந்தேன்.
நீண்ட நாட்களுக்கு முன்பு ஒருமுறை ஆந்திராவில் குர்னூல் பகுதியில் ஒரு காரில் ஏறி குறிப்பிட்ட இடத்துக்கு சென்றேன். இரவு நேரம் என்பதால் சற்று கண் அயர்ந்தேன்.
திடீரென்று கண் விழித்து பார்த்தபோது வழக்கமான பாதையிலிருந்து மாறி காட்டுப் பகுதியை நோக்கி கார் சென்றுக்கொண்டிருந்தது. எனக்கு அச்சமாகிவிட்டது. ஏன் இந்த பக்கம் செல்கிறீர்கள் என்று டிரைவரிடம் கேட்டேன். அதற்கு அவர், இது குறுக்கு வழி இந்த பக்கம் சென்றால் சீக்கிரம் சென்றுவிடலாம் என்றார்.
திடீரென காரை நிறுத்தி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவரிடம் நான் என் பலத்தையெல்லாம் சேர்த்து சண்டை போட்டேன். பிறகு அந்த காரிலிருந்து இறங்கி தப்பினேன் என்று கூறியுள்ளார். இச்செய்தி சற்று தமிழ் திரையுலகையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது மறுக்கமுடியாது
Average Rating