நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது – ஏன்? – மனம் திறக்கும் சாந்தனு…!!
Read Time:1 Minute, 12 Second
நடிகர் சாந்தனு நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோடிட்ட இடங்களை நிரப்புக படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டியில், தனது திரைப்பயணத்தில் தன்னுடைய தோல்விகள், சவால்கள், ஆசைகள் போன்றவற்றை பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் விஜய்யை பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
சாந்தனு கூறுகையில், “என் கல்யாணம் முடிந்த பிறகு ஒரு தரம் அவர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற போது, சங்கீதா அண்ணி எப்போதிலிருந்து நீ தீவிர ரசிகர் ஆன என்ற கேள்வி கேட்க வந்த போது உடனே விஜய் அண்ணா சங்கீதா அண்ணியை மா கொஞ்சம் நிறுத்து அவன் ஏன் ரசிகன் இல்லை என்றார்” ரசிகன் என்பதை தாண்டி என்னை சகோதரராக கருதுகிறார் விஜய் அண்ணா என்று கூறினார்.
Average Rating