பிராட்வேயில் 3-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி..!!
Read Time:1 Minute, 9 Second
பிராட்வேயில் 3-வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எஸ் பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிராட்வேயை சேர்ந்தவர் அலிஅஸ்கர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருகிறார். இவரது 4 வயது மகள் கதிஜா.
நேற்று மாலை வீட்டின் பால்கனி அருகே கதிஜா விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாள்.
பலத்த காயம் அடைந்த அவளை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கதிஜா பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து எஸ் பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating