பாதசாரிகள் மீது மோதிய விமானம்: பிரான்சில் பரபரப்பு…!!
பிரான்சில் சுற்றுலா விமானம் ஒன்று இரண்டு பாதசாரிகள் மீது மோதிய சம்பவம் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1,700 மீற்றர் உயரத்தில் உள்ள the altiport of Méribel பகுதியிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு சிறிய சுற்றுலா குழுவினர் பயணித்த விமானம் புறப்பட தவறி ஓடுபாதை முடிவு பகுதியிலிருந்த 10 வயது சிறுவனையும், 75 வயது முதியவரையும் மோதியுள்ளது.
விமானத்தின் இறக்கை தாக்கியதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முதியவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.
சிறுவனை மீட்ட மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் Albertville பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது. காற்று காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், தடங்கள் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், விபத்து குறித்து விமான போக்குவரத்து காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Average Rating