வங்காளதேசத்தில் 21 பேருக்கு மரண தண்டனை
Read Time:52 Second
வங்காளதேசத்தில் பிரதமர் கலீதா ஜியாவின் ஆளும் கட்சியின் உறுப்பினரான சபீர் அகமது தலுக்தர் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி நடோர் என்ற இடத்தில் இந்த கொலை நடந்தது. இந்த கொலைவழக்கு டாக்கா கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு 21 பேருக்கு மரணதண்டனை விதித்தது. தண்டனை பெற்றவர்களில் எதிர்க்கட்சியான அவாமி லீக் கட்சிப்பிரமுகர் ஒருவர் உள்பட அவரது 12 உறவினர்கள் அடங்குவர். இந்த வழக்கு அரசியல் ரீதியாக தொடரப்பட்டது என்று தண்டிக்கப்பட்டவர்களின் வக்கீல் கூறினார்.