நடுவானில் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

Read Time:1 Minute, 31 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5நடுவானில் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

160 பயணிகளுடன் ஸ்பெயினில் இருந்து போலந்து பயணித்த விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Las Palmasலிருந்து Warsaw பயணித்த B737 விமானம் செக் குடியரசு நாட்டில் உள்ள ப்ராக் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, பொலிசார் மற்றும் அவசர சேவை சம்பவயிடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். பின்னர், 160 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

செக் குடியரசின் உள்துறை அமைச்சர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளார். தீவிர சோதனைக்கு பின்னர் சூழ்நிலை கட்டுப்பாட்டிற்கு கீழ் அமைதியாக உள்ளதை அவசர சேவை உறுதி செய்துள்ளது.

இந்த ஆண்டு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பா உயர் எச்சரிக்கையில் உள்ள நிலைமையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளை பிடிக்கும் முயற்சியில் குண்டு பாய்ந்து வாலிபர் பலி…!!
Next post லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக…?