கை, கால், தலை என 13 துண்டாக வெட்டி இளம் பெண் படுகொலை: அதிர்ச்சியில் மக்கள்…!!
மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் கை, கால், தலை என 13 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள மேற்கு பான்வல் பகுதியில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை அறிந்த பொதுமக்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கேரேஜ் ஹண்டா காலனி பகுதியில் உள்ள முட்புதருக்குள் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கை, கால், தலை என மொத்தம் 13 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் பாலிதீன் பையில் கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் உடனடியாக, அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இப்பகுதியில் இளம்பெண் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா என்று அருகில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதன் பின்னர் தான் மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள இளம்பெண்ணை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
Average Rating