ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி தென்னாப்பிரிக்கா அரசு தீர்மானம்
Read Time:1 Minute, 8 Second
ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளிப்பது என்று தென்னாப்பிரிக்கா மந்திரிசபை தீர்மானம் செய்து உள்ளது. இது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படுமானால் ஆப்பிரிக்க கண்டத்தில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளித்த முதல் நாடு தென்னாப்பிரிக்கா ஆகும். இந்த திருமணத்துக்கு அனுமதி அளிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகே அது சட்டமாகும்.
கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் ஒரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுதி மறுப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தான் தென்னாப்பிரிக்கா அரசு இந்த முடிவை எடுத்தது.