திருமணமான புதுப்பெண் நகைகளுடன் தப்பியோட்டம்..!!
புதுடெல்லியை அடுத்த நொய்டாவை மனு என்பவருக்கும் கீதான் என்பவருக்கும் கடந்த வாரம் பிரோசாபாத் நகரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு நொய்டா அருகில் உள்ள லதிப்புர் கிராமத்தில் உள்ள மனுவின் வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.
இந்நிலையில், புதிதாக திருமணமான அந்த பெண் நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு தப்பியோடி விட்டதாக மாப்பிள்ளை வீட்டார் போலீசார் திடீரென புகார் அளித்துள்ளனர்.
விசாரித்ததில் திருமணம் முடிந்த பிறகு கீதாவின் உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் கீதாவை அழைப்பதற்காக மாப்பிள்ளை மனு சென்ற போது அங்கு யாருமே இல்லை. அவர்களது அனைத்து செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனு தங்கவுர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த திருமணத்திற்காக இடைத் தரகருக்கு மனு ஒரு லட்சம் ரூபாய் அளித்து இருந்தார்.
Average Rating