நடிகை சாந்த்ரா தாமசை தாக்கிய நடிகர் மீது வழக்கு..!!

Read Time:2 Minute, 0 Second

201701050929256828_malayalam-actors-support-sandra-thomas-vijay-babu-in-assault_secvpfஎர்ணாகுளம் நகரில் மலையாள பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர்கள் நடிகை சாந்த்ரா தாமஸ் மற்றும் நடிகர் விஜய்பாபு. இவர்கள் நிறுவனம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட மலையாள படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்து பல நாட்கள் ஓடின. இந்தநிலையில் சம்பவத்தன்று சாந்த்ரா தாமஸ் தனது கணவரான தாமசுடன் பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தார்.

அப்போது அங்கு நடிகர் விஜய்பாபு வந்தார். அந்தநேரத்தில் சாந்த்ரா தாமசுக்கும், விஜய்பாபுவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய்பாபு நடிகை சாந்த்ரா தாமஸ் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் கீழே மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அவருடைய கணவர் தாமஸ் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாந்த்ரா தாமசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சாந்த்ரா தாமஸ் எலமக்கரை போலீசில் புகார் தெரிவித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சாந்த்ரா தாமசை தாக்கியதாக விஜய்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையை, சக நடிகர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்..!!
Next post ரொமான்ஸுக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?..!!