வெண்புள்ளிக்குரிய சிகிச்சை..!!

Read Time:3 Minute, 12 Second

health_image_2ஒரு சிலருக்கு உடலில் திடீரென்று வெண்புள்ளிகள் தோன்றும். உடனே அவர்கள் தங்களுக்குஏதோ வந்துவிட்டதாக கருதி மனக்குழப்பதிற்கு ஆளாகிவிடுவர்.

ஆனால் வெண்புள்ளி என்பது உடலில் உள்ள நிறமி இழப்பாகும். பாக்டீரியா, வைரஸ் போன்ற எந்த ஒரு கிருமியாலும் இது தோன்றுவது இல்லை. எனவே, இது ஒரு தொற்று நோய் இல்லை.

நம் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் நம் உடலில் நுழையும் நச்சுக் கிருமிகளை அழித்து நம்மைப் பாதுகாக்கும்.

ஆனால், ஒரு சிலரது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் உடலில் உள்ள ஓர் உறுப்பையே எதிரியாக நினைத்து அழிக்க ஆரம்பித்துவிடும். இதை ‘ஓட்டோ இம்யுன் டிஸ்ஓர்டர்’ என்று கூறுவர்.

நம் சருமத்தில், நிறத்தை அளிப்பதற்காக ‘மெலனோசைட்’ என்ற சுரப்பி உள்ளது.

வெள்ளை அணுவானது இந்த சுரப்பியை நம் உடலுக்குச் சம்பந்தம் இல்லாத பொருள் என்று நினைத்து அழிக்க ஆரம்பிக்கிறது.

எனவே, தோலின் எந்த இடத்தில் இந்தத் தாக்குதல் ஏற்படுகிறதோ அந்த இடத்தில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதைத் தடுக்க முடியாது.

வெண்புள்ளி வந்த பிறகு அதைச் சரிப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், அவற்றால் பலன் ஓரளவுக்குத்தான் கிடைக்கும்.

வெண்புள்ளிகளில் இரண்டு வகைகள் உண்டு.

1.`விட்லிகோ’

2.`லூக்கோ டெர்மா’.

இதில் ‘விட்லிகோ’ எனப் படுவது உடல் முழுவதும் வேகமாகப் பரவக்கூடியது. பெரும்பாலும் உதடு, கைகள், கால்கள், தொப்புள், பிறப்புறுப்புகள், மார்புக் காம்பு, காது போன்ற இடங்களில் தோன்றி படிப்படியாக வளரத் தொடங்கும். இதில் ஒரு சிலருக்கு உடல் முழுவதும் வேகமாகப் பரவி, வெள்ளைகாரர் போல் மாறிவிடுவதும் உண்டு.

தற்போது இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் புதிய மூலிகை மருந்தைக் கண்டறிந்து உள்ளது.

இந்த மருந்தைப் பயன்படுத்தும்போது வெண்புள்ளிகள் மறையத் தொடங்குகின்றன. மாதக்கணக்கில் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். 12 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த மருந்து முழுமையான பலனை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெர்மனி தாக்குதல்தாரி தொடர்பில் வௌிவந்த திடுக்கிடும் தகவல்..!!
Next post காதலருக்காக தென்னிந்திய நடிகைகள் யாரும் செய்யாத வேலையை செய்த நயன்தாரா..!!