ஜெர்மனி தாக்குதல்தாரி தொடர்பில் வௌிவந்த திடுக்கிடும் தகவல்..!!
Read Time:1 Minute, 18 Second
அண்மையில் ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்ட (Tunisia) டியுனீசிய நாட்டை சேர்ந்தவர், ஜேர்மனியில் 14 வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் நாட்டு காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஜேர்மனியில் உள்ள சந்தை தொகுதி ஒன்றில் பாரவூர்தி ஒன்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர் டியுனீசியா நாட்டை சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார்.
அவர் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி இத்தாலியில் வைத்து சுட்டுகொல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
அவர் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் 14 வகையிலான பெயர்களுடன் வசித்து வந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
Average Rating