மனைவி, மகள்கள் உட்பட 12 பேரின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்..!!

Read Time:3 Minute, 24 Second

cut-by-swordஇந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பெண்கள் 8 சிறுமிகள் உட்பட 12 பேரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ததாக கருதப்படும், தற்கொலை செய்துகொண்ட ஜமாலுதீன் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

45 வயதான ஜமாலுதீன் தனது மனைவி மற்றும் 5 மகள்களுடன் மஹோனா என்னும் கிராமத்தில் வசித்து வந்தார். ஜமாலுதீனுடன் அவரது சகோதர்களின் மனைவிகள் இருவரும் குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

அவரது சகோதரர்கள் அவர்களுடைய மனைவிகளை கைவிட்டுவிட்டதாகவும் கூறப்படிகிறது. இதனால் ஜமாலுதீனுக்கு அதிகமான அளவில் குடும்ப பாரம் இருந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப பாரத்தின் காரணத்தின் காரணமாகவே ஜமாலுதீன் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

மேலும் சமபவம் நடந்த அன்று இரவு ஜமாலுதீன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஊட்டசத்து மருந்து எனக்கூறி பூச்சி மருந்தினை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் தூங்கிய பின்னர், கத்தியால் அனைவரின் கழுத்தையும் அறுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஜாமாலுதீனின் மனைவி மற்றும் ஒரு மகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அவர்கள் உயிர் பிழைத்தால் தான் சம்பவத்தன்று நடந்தது என்ன என்ற உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரத்தக் கறையுடன் இரண்டு கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

மேலும் ஜமாலுதீன் தான் இந்த கொலைகளை எல்லாம் செய்திருந்தால் அவருக்கு இரண்டு கத்திகள் தேவையில்லை என கூறினர்.

இதனால் மர்மநபர்கள் சிலர் இந்த கொலைகளை செய்து விட்டு அது ஜமாலூதீன் செய்தது போல் சித்தரித்திருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் எப்படி உயிரிழந்தனர் என தெரியவரும் என்றும் பொலிஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?..!!
Next post காம உணர்வுகள் சரியா அல்லது தவறா?..!!