ஜெ., க்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர் செப்.,23 அப்போலோ வந்த மர்மம்! வீடியோ ஆதாரம்.!!

Read Time:2 Minute, 20 Second

jayadeath_sasikala_livedayதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை காரணமாக செப்.,22ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கபட்டார்.

75 நாட்கள் கழித்து மரணம் அடைந்ததாக அப்போலோ அறிவித்தது. இதற்கு இடைபட்ட காலத்தில் ஜெ.,வை பார்க்க கவர்னர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை யாரையும் அனுமதிக்கவில்லை.

ஜெ.,பற்றிய உண்மைகள் சசிகலா மற்றும் டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும். மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. ஆனால், அதற்கு யாரும் சரியான பதில் கூறவில்லை.

இதனால், தமிழக மக்கள் மற்றும் அ.தி.மு.க.,தொண்டர்கள் இது வரை குழப்பத்தில் உள்ளனர்.

ஜெ.,மரணத்தில் போது இறுதிசடங்குகள் செய்த புரோகிதர், ஜெ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம் செப்.,23ம் தேதி காலையில் வரவழைக்கப்பட்டார். அவர் வந்த போது சசிகலாவின் உதவியாளர்கள் அவரை மருத்துவமனையின் பின்புறமாக அழைத்து சென்றனர்.

இது குறித்து, ஜெ.,உண்மை விசுவாகிகள் கூறுகையில்,‘‘ செப்.,22ம் தேதி இரவே முதல்வர் ஜெ.,மரணம் அடைந்திருக்கலாம். அதன் காரணமாகவே செப்.,23ம் தேதி புரோகிதரை சசிகலா மருத்துவனைக்கு வரவழைத்து சடங்குகள் செய்துள்ளார்,’’என்றனர்.

புரோகிதர் செப்.,23ம் தேதி ஏன் அழைக்கப்பட்டார்? அன்றைய தினம் மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பது புதிராகவே உள்ளது.
தற்போது அந்த புரோகிதர் வந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்டு, அந்த புரோகிதர் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார். விரைவில் உண்மை வெளியாகும் என ஜெ.,உண்மை விசுவாசிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

https://youtu.be/WipzKkeSzGs

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலும் போச்சு காவலுக்கு நின்ற நாயும் போச்சு..!! (அசத்தல் வீடியோ)
Next post மனைவிக்கு கணவராக மட்டுமல்ல நண்பனாகவும் இருங்க..!!