ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஐடியா..!!
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, மூக்கினூடுடாக சுவாசிக்கையில் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும், பயத்துக்குரிய துலங்கல் திறன் அதிகரிப்பதாகவும் வெளிக்கொணர்ந்திருக்கின்றது.
அதேநேரட் வாய்வழி சுவாசம் மேற்படி இயல்புகளை இல்லாது செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இவ் ஆய்வானது Neuroscience எனும் ஆய்வுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சுவாசிக்கும் சந்தமானது மனித மூளையில் மின் செயற்பாட்டை தூண்டி, அது உணர்ச்சி சம்மந்தப்பட்ட செயற்பாடுகளையும், ஞாபகத்தை தூண்டும் செயற்பாடுகளையும் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
இவ் ஆய்வில் வெளிச்சுவாசத்தை மேற்கொண்டவர்களை விட, உட்சுவாசத்தை மேற்கொண்டவர்கள் விரைவாக பயந்த முகங்களளை பொண்டவர்களாக மாறியதை இனங்காணப்பட்டிருந்தனர்.
அத்தோடு இவர்கள் விரைவாக ஒரு பொருளை ஞாபகப்படுத்தும் திறனைக் கொண்டிருந்தனர்.
நாம் உட்சுவாசிக்கும் போது olfactory cortex, amygdala மற்றும் hippocampus இலுள்ள நரம்புக் கலங்கள் தூண்டப்படுகின்றன. அதனாலேயே மேற்படி செயற்பாடுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கருத்து.
இவ் ஆரய்வுக்கென 60 பேர் பரிசீலிக்கப்பட்டிருந்தனர். நாசி வழி சுவாசத்தை மேற்கொண்டவர்களே மேற்படி இயல்புகளை காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating