ஈராக்கில் தற்கொலை குண்டு தாக்குதல் – 11 பேர் பலி..!!
ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள சந்தைப் பகுதியில் இன்று தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஜமிலா சந்தைப் பகுதி வழியாக சந்தேகிக்கும் வகையில் இன்று காலை வேகமாக வந்த ஒரு சிற்றூர்ந்தை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவற்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அங்கு நிற்காமல் தப்பிச் செல்ல சிற்றூர்ந்தின் சாரதி முயன்றதால் அந்த வாகனத்தின்மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சிற்றூர்ந்தில் இருந்த தீவிரவாதி கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்ட் பொத்தானை இயக்கியதில் அந்த சிற்றூர்ந்து பயங்கரமாக வெடித்து சிதறியது.
இந்த தாக்குதலில் 11 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
35-க்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating