காதலிக்க மறுத்த யுவதியை கத்தியால் குத்திய இளைஞன்..!!

Read Time:3 Minute, 4 Second

cut-killedதன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் இளைஞரொருவர், யுவதி‍யை கத்தியால் குத்திய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுகெயின்சி (வயது 25). நெல்லை மாவட்டத்தில் ஒரு பாலிடெக்னிக்கில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர், புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்றுமுன்தினம் இரவு சின்னத்துறையில் உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்றுள்ளார்.

நள்ளிரவு பிரார்த்தனை முடிந்து வெளியே வந்தபோது, இளைஞரொருவர் அவரை கத்தியால் குத்தினார். இதில் அவர், வயிறு, மார்பு, கை உள்பட 3 இடங்களில் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார்.

சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த அனு கெயின்சி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவரின் பெயர் பெஜி காஸ்ட்ரோ (வயது 27) என்பது தெரியவந்தது. இவர், பாடசாலை காலத்திலிருந்தே அனு கெயின்சியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

பி.இ. 2ஆம் வருடம் படித்தபோது அனுகெயின்சிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது பெற்றோர் இது தொடர்பாக நித்திரவிளை பொலிஸில் 5 முறை முறையிட்டுள்ளனர்.

இதில் ஒருமுறை வழக்குப்பதிவு செய்த போலீசார் பெஜி காஸ்ட்ரோவை அழைத்து, அவள் திருமணமாகி செல்லும் வரை ஊருக்கு வரக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர், கேரள மாநிலம் கொச்சியில் தங்கியிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் அனுகெயின்சிக்கு வரும் 5 ஆம் திகதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்து ஆத்திரமடைந்த பெஜிகாஸ்ட்ரோ, அனுகெயின்சியை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் அருகில் உள்ளவர்கள் அவரை பிடித்து விட்டார்கள்.

இவர், ஒருதலை காதல் காரணமாக ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை சிவக்குமாருக்காக மீண்டும் இணைந்த சூர்யா-கார்த்தி..!!
Next post உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா என அக்குள் பகுதியை பார்த்து எப்படி தெரிந்து கொள்வது?..!!