ஜெயலலிதா மரணம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!!

Read Time:1 Minute, 52 Second

rtrதமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஜெயராமின் மரணம் தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர் டிசம்பர் 5ம் திகதி இரவு, 11:30க்கு அவர் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது எனவும், இந்திய உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியும் சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஜோசப் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக நான்கு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் விசாரணையை, பெப்ரவரி 23ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைமுடி வளர இப்படியும் செய்யலாமா…!!
Next post பழுப்பு நிற கரடியின் வேட்டை: ஒரு நாளில் 45 கிலோ..!! (வீடியோ)