கனேடிய பொலிஸாரின் மூளையை அதிர வைத்த யாழ்ப்பாண புருஷன் – பெண்டாட்டியின் கிரிமினல் வேலை..!!

Read Time:2 Minute, 28 Second

untitledதமிழன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை என்று சொல்வார்கள். அதே போல தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அதற்கோர் குணம் உண்டு என்றும் சொல்வார்கள். இவற்றுக்கு சரியான உதாரணம் யாழ்ப்பாண தமிழர்கள்.

கடந்த கால யுத்தத்தை காரணம் காட்டி பெரிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற இவர்களின் தனி குணமே பெரும்பாலும் மோசடி செய்து பணம் சம்பாதிப்பதும், ஊருக்கு விடுமுறையில் திரும்பி வருகின்றபோது சந்தனம் மிஞ்சினால் எங்கோ எல்லாம் பூசுவது போல உலக கோடீஸ்வரர் லெவலில் வீண் பந்தா காட்டுவதும் ஆகும்.

இவர்கள் அங்கு டீசெண்டான வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர் என்று நாம் நினைத்து கொண்டிருக்க இன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி பேர்வழிகளான கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரண் அடைந்து உள்ளனர்.

சிவகுமார் குமாரவேலு – வயது 57, நகுலேஸ்வரி சிவகுமார் – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்..

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை கடன் பெற்றனர். இதே போல 200, 000 டொலர்களை புதிதாக விண்ணப்பித்து பெற்ற நிலையிலேயே மாட்டி உள்ளனர்.

வீட்டு உரிமையாளர் உண்மையான ஆவணங்களை காண்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தார். பொலிஸார் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்ட நிலையிலேயே வேறு வழி இல்லாமல் இவர்கள் சரண் அடைந்தனர்.

பின்ஞ் அவனியூ வேஸ்ட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 24 ஆம் திகதி இடம்பெற உள்ளது. 5000 டொலர்களுக்கு மேல் மோசடி செய்ததாக வழக்கிடப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னை வலிமையான பெண்ணாக மாற்றியது பாகுபலி: தமன்னா..!!
Next post ஜெருசலேத்தில் ராணுவ வீரர்கள் மீது லாரி ஏற்றி தாக்குதல்: 4 பேர் பலி..!! (அதிர்ச்சி வீடியோ)