தாய்வான் அர­சி­யல்­வா­தியின் மரண ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த 50 நடன மங்­கை­களின் அணி­வ­குப்பு..!! (வீடியோ)

Read Time:2 Minute, 36 Second

21653article-doc-jm007-13mvvbq3z19dcc41574db1019c73-249_634x389-copyதாய்­வானில் அர­சி­யல்­வாதி ஒரு­வரின் இறுதி ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கைகள் 50 பேர் வாக­னங்­களில் அணிவகுத்துச் சென்­றமை பெரும் எண்­ணிக்­கை­யான மக்­களை வியக்க வைத்­தது. இந்த ஊர்­வ­லத்தால் போக்­கு­வ­ரத்து நெரி­சலும் ஏற்பட்டது.

தாய்­வானின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள சியாயி எனும் நகரைச் சேர்ந்த துங் ஹ்சியாங் என்ப­வரின் இந்த மரண ஊர்­வலம் கடந்த செவ்வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது.

உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னரான துங் ஹ்சியாங் என்­பவர் கடந்த மாதம் தனது 76 ஆவயதில் கால­மானார்.

அவரின் இறுதி ஊர்­வ­லத்­தி­லேயே நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கை­களும் இவ்­வாறு அணி­வ­குத்து சென்­றனர்.

சியாயி நகரில் நடை­பெற்ற இந்த இறுதி ஊர்­வ­லத்தில் சுமார் 200 வாக­னங்கள் பல கிலோ­மீற்றர் தூரம் அணி
வ­குத்துச் சென்­றன.

நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கைகள் 50 பேர் திறந்த வாக­னங்­களில் நின்­று­கொண்டு சென்­றனர்.

இவர்­களைப் பார்ப்­ப­தற்கு பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் வீதி­யோ­ரங்­களில் திரண்­டனர். இதனால் பல வீதி­களில் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்­டது.

தாய்­வானில் மரணச் சடங்­கு­க­ளின்­போது கவர்ச்சி ஆடை அணிந்த நடன மங்­கை­களை நட­ன­மாட வைக்கும் வழக்கம் உள்­ளது.

இறந்­த­வரின் குடும்­பத்­த­வர்கள் தமது செல்­வச் ­செ­ழிப்பை வெளிப்­ப­டுத்தும் வகையில் இத்­த­கைய நிகழ்­வு­களை மிக ஆடம்­ப­ர­மாக நடத்­து­வதில் பெரு­ம­டை­கின்­ற­னராம். சிலர் துகி­லுரி நடன மங்­கை­க­ளையும் நட­ன­மாட அழைப்­ப­துண்டு.

துங் ஹ்சியாங் சுவா­ரஸ்­ய­மான வாழ்க்கை முறை யை விரும்பியவர் எனவும் இதனால், அவருக்கு ஆடம்ப ரமாக பிரியாவிடை அளிப்ப தற்கு தாம் தீர்மானித்ததாகவும் துங் ஹ்சியாங் கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்­ப­கங்­களை பெரி­தாக்­கு­வ­தற்குப் பணம் சேக­ரிப்­ப­தாகக் கூறி லண்டன் வீதியில் யாசகம் பெற்ற நோர்வே மொடல்..!!
Next post போத்தல் மூடியை விழுங்கிய நபர்- ஆணுறையை பயன்படுத்தி எடுத்த வைத்தியர்கள்..!!